Saturday, September 26, 2020

கடந்த வருடம் 25.08.2019 யன்று

கடந்த வருடம் 25.08.2019 யன்று இக் கருத்தை ஜேவிபி தலைவர் அனுரா அவர்கள் கூறியிருந்தார். ஆனால் இது இப்போது விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கூறிய கருத்து என்று சிலர் முகநூலில் பகிர்கின்றனர். அப்போதே இது குறித்து பதிவு செய்திருப்பினும் இப்போது அதனை மீண்டும் மீள்பதிவு செய்ய வேண்டியுள்ளது. •தோழர் அனுரா அவர்களே! இனங்கள் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்று கோருங்கள். ஒத்துக் கொள்கிறோம் இனங்கள் ஜக்கியமாக வாழ வேண்டும் என்று கோருங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒருபுறம் பௌத்த இனவாதத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் மறுபுறம் தமிழர் தம் வரலாற்றை கைவிட வேண்டும் எனக் கோராதீர்கள். ஏனெனில் எம்மிடம் எஞ்சி இருப்பது எமது வரலாறு மட்டுமே. அதையும் தொலைத்து விட்டால் அப்புறம் நாம் எப்படி எழுந்து நிற்க முடியும்?

No comments:

Post a Comment