Saturday, September 26, 2020

அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி!

•அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி! டெல்லி செய்தியாளர் ராஜீவ் சர்மாவை ஓஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பதாக டில்லி பொலிஸ் தெரிவித்துள்ளது அவர் செய்த தவறு சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ்க்கு கட்டுரை எழுதியது. அவர் தனது கடடுரையில் ''இதுவரை இருதரப்புக்கும் இடையே நடந்து இருந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் வீணாகியுள்ளது. 1962க்குப் பின்னர் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. தங்களது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சண்டையிட்டு, ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்து இருந்தார். அவர் எழுதியதில் என்ன தவறு? அவர் உண்மையைத்தானே எழுதியிருக்கிறார். எதற்காக அவரை கைது செய்ய வேண்டும்? சீனப் பத்திரிகைக்கு கட்டுரை எழுதியதற்காக ஒரு செய்தியாளரை கைது செய்யும் இந்த அரசுதான் சீன வங்கியில் 9000கோடி ரூபா கடன் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது நடைபெறும் ஐபிஎல் கிரிக்ட் போட்டியின் ஸ்பான்சராக சீன நிறுவனமான VIVO தொடரும் என்று BCCI அறிவித்திருக்கிறது. இந்த BCCI யின் செயலாளராக இருப்பவர் உள்துறை அமைச்சர் அமிர்த்ஷாவின் மகன் ஜெ.ஷா போங்கடா நீங்களும் உங்கட தேசபக்தியும்.

No comments:

Post a Comment