Saturday, September 26, 2020

உலகில் எந்த நாட்டின் அரசாவது

உலகில் எந்த நாட்டின் அரசாவது தன் சொந்த மக்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் “சமாதானத்திற்கான யுத்தம்” என்று கூறிக்கொண்டு தம் நாட்டு மக்களை கொன்ற பெண் ஜனாதிபதியை அறிந்திருக்கிறீர்களா? ஆம். அத்தனை அதிசயத்தையும் இலங்கையில் நிகழ்த்தியவர் “சமாதான தேவதை” என்று அழைக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவே. 22.09.1995 யன்று யாழ்ப்பாணத்தில் நாகர்கோவில் பாடசாலை மீது சந்திரிக்காவின் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். கொஞ்சம்கூட இரக்கம் இன்றி மாணவர்கள் மீதே குண்டு வீசி வழிகாட்டியவர் சந்திரிக்கா குமாரதுங்கவே. இது குறித்து மனித உரிமை அமைப்புகளோ அன்றி உலக அமைப்புகளோ இதுவரை ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் என்று கேட்பதற்கு யாரும் அற்ற ஒரு நாதி அற்ற இனமாக தமிழ் இனம் இருப்பதால்தான் அவர்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment