Wednesday, September 30, 2020

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது மனிஷா என்ற இளம்பெண்

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது மனிஷா என்ற இளம்பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக கழுத்து மற்றும் எலும்புகளை அடித்து முறித்துள்ளனர். அதன் பின்னர் நடந்தவற்றை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவரின் நாக்கை அறுத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி அப் பெண் இறந்தவிட்டார். நடந்திருப்பது கூட்டு பாலியல் வல்லறவு மற்றும் படுகொலை. ஆனால் அரசோ இரவோடு இரவாக அப் பெண்ணின் உடலை எடுத்துச் சென்று புதைத்துள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவரை படுகொலை செய்தவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இது எதோவொரு சம்பவம் இல்லை. அதே உத்தர பிரதேச மாநிலத்தில் அதே நாளில் இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. மீரட்டில் இருந்து டில்லிக்கு பயணம் செய்த பெண் ஒருவர் அதே பஸ் டிறைவர் மற்றும் கண்டக்ரலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்டிருக்கிறார். இந்தியாவில் பசு மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்புகூட பெண்களுக்கு இல்லை.

No comments:

Post a Comment