Saturday, September 26, 2020

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! குட்டிமணி அவர்களின் மனைவி திருமதி இராச சொரூபராணி அவர்கள் காலமாகிவிட்டார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். குட்டிமணி தேடப்பட்ட காலத்தில் குட்டிமணியைவிட அதிகளவு சித்திரவதையை அனுபவித்தவர் அவரின் மனைவியே. ஒருமுறை குட்டிமணியைத் தேடிச் சென்ற பொலிஸ் ஒருவர் நிறைமாதக் கர்ப்பிணியான குட்டிமணியின் மனைவியைப் பார்த்து “ குட்டிமணி வீட்டுக்கு வருவதில்லையென்றால் நீ எப்படி கர்ப்பமானாய்? என்று அசிங்கமாக கேட்டு தவறாக நடக்க முற்பட்டார். இவ்வாறு நடந்துகொண்டவர் ஒரு தமிழ் பொலிஸ். பின்னர் அவர் குட்டிமணியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நல்லவேளையாக குட்டிமணியின் மனைவியும் பிள்ளைகளும் அகதியாக தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டனர். இல்லையேல் குட்டிமணியைக் கொன்றதுபோன்று அவரது மனைவியையும் குழந்தையையும் பொலிசார் கொன்றிருப்பார்கள். ஆனால் இவ்வாறு அர்ப்பணிப்பு செய்தவர்களின் மனம் நோகுமே என்ற சிந்தனைகூட இன்றி இவர்களின் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் சுமந்திரன் கூறினார். சுமந்திரன் இவ்வாறு கூறிய பின்பும்கூட தன் கணவன் போராடச் சென்றது குறித்து குட்டி மணியின் மனைவி ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. குட்டிமணி மட்டுமல்ல தமிழ் மக்களும் பெருமை கொள்ள வைத்துள்ளார். அவருக்கு நன்றியுடன் விடை கூறுவோம்!

No comments:

Post a Comment