Saturday, September 26, 2020

பாராளுமன்றத்திலும் சரி,

பாராளுமன்றத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி இலங்கை அரசின் எந்த அமைப்பிலும் தமிழருக்கு நீதியோ நியாயமோ கிடைக்காது என்பதை அம்பலப்படுத்துவதைவிடுத்து ஹர்த்தால் , ஒருநாள் உண்ணாவிரதம் என்று செய்வதை எரிச்சலுடன் விமர்சிப்பதா? அல்லது “திலீபன் நினைவுதினம் கொண்டாடினால் அப்புறம் உனக்கு நினைவுதினம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள்” என்று ஒரு பிரதேசபை உறுப்பினரையே சிங்கள ராணுவ அதிகாரி மிரட்டுகின்ற சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஹர்த்தால் மற்றும் ஒருநாள் உண்ணாவிரதம் செய்யவாவது முன்வந்தார்களே என ஆறுதல் கொள்வதா? எதுவாயினும் இதுவரை ஒருவருக்கொருவர் எதிர் அரசியல் செய்தவர்கள் இப்போது திலீபனுக்காக ஒருமித்து செயற்பட முன்திருப்பது ஆரோக்கியமானதே. எனவே நம்பிக்கையுடன் வரவேற்போம். ஒருமித்து ஒத்துழைப்பு வழங்குவோம்.

No comments:

Post a Comment