Saturday, September 26, 2020

என்னே அவலம் இது?

•என்னே அவலம் இது? நேதாஜியின் படையில் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காக போரடிய முதியவர் ரெங்கசாமி மரணமடைந்துள்ளார். இவரின் மரண செய்தி ஊடகங்களில் வரவில்லை. ஆனால் சூரியா சுன்னத் செய்த முஸ்லிம் என்று காயத்திரி ரகுராம் கூறியது செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது. இதுகூடப் பரவாயில்லை. ஆனால் இறந்த தியாகிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சங்கிகளுக்கு தோன்றவில்லை. மாறாக, திருப்பூரில் சில சங்கிகள் சூரியாவின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சூரியா அப்படி என்ன தப்பு பண்ணிட்டார்? தமிழ் மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுப்பது தவறா? அதுவும் பலலாயிரம் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துவரும் சூரியாவுக்கு அம் மாணவர்களின் நலன் குறித்து குரல் கொடுக்க தகுதி இல்லையா? கைபர் கணவாய் ஊடாக தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழன் சோத்தை தின்னுகிட்டே தமிழனுக்கு எதிராக செயற்படுகிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment