Saturday, September 26, 2020

சிவசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் வாழ்கிறார்

சிவசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் வாழ்கிறார். அவர் ஒரு வழக்கறிஞரும்கூட. இருந்தும் சில மாதங்களுக்கு முன்னர் எனது பதிவு ஒன்றின் கீழ் வந்து “ உனக்கு பையித்தியம். போய் ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்” என்று எழுதியிருந்தார் . ஒரு படித்தவர் பொதுவெளியில் இப்படி எழுதியது ஆச்சரியமாக இருந்தாலும் இவர் எமது முதல் தியாகி சிவகுமாரனின் சகோதரர் என்பதால் நான் மௌனம் காத்தேன். இப்போது அவரே எனது இன்னொரு பதிவின் கீழ் வந்து “தோழர் பாலன் கருத்துடன் உடன்படுகிறேன்” என்று எழுதியுள்ளார். கடந்த 40 வருட அரசியல் பயணத்தில் இவ்வாறு பல அனுபவங்களை நான் பெற்று வருகின்றேன். 2013ம் ஆண்டு முதல் நான் இதுவரை முகநூலில் 3686 பதிவகள் இட்டுள்ளேன் ( கீழ்வரும் இணைப்பில் எனது முகநூல் பதிவுகள் யாவற்றையும் படிக்கலாம் http://tholarbalan.blogspot.com/) வியட்நாம் தந்தை ஹோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மைகளாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் வெற்றியை பெற்று தந்தார்கள்” என்று பதில் அளித்தார். எனவேதான் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என்பதற்காக நான் உண்மைகளை மக்களுக்கு கூறாமல் இருப்பதில்லை. மக்களுக்கு உண்மைகளை கூறுவோம். அவர்கள் நிச்சயம் வெற்றியை பெற்று தருவார்கள்.

No comments:

Post a Comment