Saturday, September 26, 2020

இந்தி தெரியாத தமிழன் தீவிரவாதியா?

இந்தி தெரியாத தமிழன் தீவிரவாதியா? இலங்கையில் சிங்கள மொழி தெரியாத தமிழர்களை தீவிரவாதிகள் என்று சிங்கள இனவெறியர்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் இந்தியாவில் இந்தி மொழி தெரியாத தமிழர்களை தீவிரவாதிகள் என்று இந்தி வெறியர்கள் கூறுகின்றனர். கனிமொழி கலைஞர் கருணாநிதியின் மகள் மட்டுமல்ல. அவர் ஒரு எம்.பியும்கூட. தனக்கு இந்தி தெரியவில்லை என்று கூறியதால் தான் அவமதிக்கப்பட்டேன் என்று கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது அரசியல் லாபத்திற்காக கூறுவதாக சங்கிகள் கூறினார்கள். ஆனால் இப்போது தனக்கு இந்தி தெரியவில்லை என்று கூறியபோது தன்னை ஒரு தீவிரவாதி என்று கூறி டில்லி விமானநிலைய அதிகாரி அவமதித்ததாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றிமாறன் ஒரு புகழ் பெற்ற இயக்குனர். அகில இந்திய பரிசுகள் பெற்றவர். அதுமட்டுமல்ல இந்தியா சார்பாக கனடா கலாச்சார விழாவில் பங்குபற்றிவிட்டு வரும்போதே அவருக்கு இந்த அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. தான் தமிழர் என்பதால் இந்தி திரையுலகம் தன்னை திட்டமிட்டு ஒதுக்குவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். தமிழர் என்னதான் தம்மை இந்தியராக நினைத்தாலும் அல்லது இந்துவாக நினைத்தாலும் அவர்கள் தமிழர்களை சக மனிதராக கூட மதிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் தோழர் தமிரசன் பேசிய மொழியில் தமிழர்கள் பேச ஆரம்பிக்க வேண்டும். ஆம். தோழர் தமிழரசன் தோளில் தொங்கிய துப்பாக்கி தயாராக காத்து இருக்கிறது. தமிழர்களே நீங்கள் தயாரா?

No comments:

Post a Comment