Saturday, September 26, 2020

கோர்ட்டாவது மயிராவது!

•கோர்ட்டாவது மயிராவது! நீதிபதி – கைதி எப்படி இறந்தார்? சிறை அதிகாரி – கரண்ட் வயரை கடித்து இறந்தார். நீதிபதி – அப்படியா? சரி அந்த சிசிடிவி கமரா பதிவகள் எங்கே? சிறை அதிகாரி – அப்போது கரண்ட் இல்லை. அதனால் அவை வேலை செய்யவில்லை. நீதிபதி - ???? இது ஒரு நகைச்சுவை ஜோக்தான். ஆனால் உண்மையில் நடந்தது இதைவிட மோசமானது. சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் கொல்லப்பட்ட நாள் இன்று. இதுவரை சுவாதி வழக்கு உண்மைகள் வெளிவரவும் இல்லை. ராம்குமார் மரணத்திற்கும் நீதி கிடைக்கவும் இல்லை. நான் மதுரை சென்னை சிறைகளில் எட்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். எந்த சிறையிலும் கைதிக்கு எட்டும் வகையில் கரண்ட் வயர் தொங்கியதை கண்டதில்லை. ஆனால் ராம்குமார் அறையில் மட்டும் அவருக்கு எட்டும் வகையில் கரண்ட் வயர் தொங்கியதாம். ஏனோ தெரியவில்லை. சிதம்பரம் , கனிமொழி சசிகலா போன்றவர்கள் இருந்த சிறை அறைகளில் வயர் தொங்குவதில்லை.

No comments:

Post a Comment