Saturday, September 26, 2020

ஒருபுறம் கொரோனோ அச்சுறுத்தல்

ஒருபுறம் கொரோனோ அச்சுறுத்தல். மறுபறம் அரசின் தடைகள். ஒருபுறம் பொலிஸ் தடை என்கிறது. மறுபுறம் ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறது. இத்தனைக்கும் மத்தியில் தமிழ் தலைவர்கள் ஒருமித்து திலீபனை நினைவு கூருகின்றனர். இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலரும் திலீபனை நினைவு கூர்கின்றனர். யாருடைய பெயரைக் கூறினால் எதிரிகளும் துரோகிகளும் எரிச்சல் அடைகிறார்களோ அவருடைய பெயர் நினைவு கூரப்பட வேண்டியது. ஆம். திலீபன் பெயர் எதிரிக்கு எரிச்சல் கொடுக்கிறது. எனவே அவர் நினைவு கூரப்பட வேண்டும். எனவே எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனையும் உடைக்கப்படும்.

No comments:

Post a Comment