Saturday, September 26, 2020

இலங்கை அரசு தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது.

இலங்கை அரசு தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. அது தன் பொலிஸ் மற்றும் ராணுவம் மூலம் மாணவர்களை அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்ந்துவிடுவார்களோ என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டுகிறது. நினைவு கூர்வது எமது உரிமை. அதை அச்சுறுத்தலுக்கு பயந்து விட்டுத்தர முடியாது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாமல் அரசு திண்டாடுகிறது. சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இனவாதத்தை அரசு மேற்கொள்கிறது. இப்போது தமிழ் மக்கள் முன் ஒரேயொரு கேள்விதான் இருக்கின்றது. அடிமையாக வீழ்ந்து கிடக்கப்போகிறோமா அல்லது அரசின் அராஜகத்திற்கு எதிராக எழுந்து நிற்கப்போகிறோமா என்பதே

No comments:

Post a Comment