Wednesday, September 30, 2020

சீமானும் பரூக் அப்துல்லாவும்

சீமானும் பரூக் அப்துல்லாவும் “காஸ்மீர் மக்கள் சீனா எப்போது வரும் என்று காத்து இருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்தியாமீது வெறுப்பாக இருக்கிறார்கள்” என்று காஸ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். பரூக் அப்துல்லா இப்படி கூறியதற்காக இதுவரை எந்த சங்கிகளும் பொங்கவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவும் இல்லை. ஆனால் இதையே தமிழ்நாட்டில் சீமான் கூறியிருந்தால் எச்ச ராசா முதல் பாண்டேவரை அனைத்து சங்கிகளும் பொங்கியிருப்பார்கள். வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் இந்நேரம் சீமானை சிறையில் அடைத்திருப்பார்கள். உண்மையில் காஸ்மீரில் அதிகளவு ஆபத்து இருந்தும்கூட இந்திய அரசு தமிழ் மக்கள் மீதே அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் காஸ்மீர் பிரிந்தால் காஸ்மீர் மட்டுமே பிரியும். ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் முழு இந்தியாவுமே உடைந்துவிடும் என்று இந்திய அரசு அச்சப்படுகிறது. ஹர்த்தாலுக்கு ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார். இது பரூக் அப்துல்லா கூறியதைவிட அதிக எரிச்சலை இந்திய அரசுக்கு எற்படுத்கூடியது. ஏனெனில் இதுவரை வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற நிலைக்கு தமிழக அமைப்புகள் நகருவதையே இது காட்டுகிறது. ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒருமித்து செயற்படும் நிலைக்கு வந்துவிட்டால் அதனால் இலங்கை அரசைவிட இந்தியாவே அதிக பாதிப்பை சந்திக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. அதனால்தான் தமிழ்நாடு தனிநாடாக பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்திய அரசு நசுக்குகிறது. ஆனால் ஈழத் தமிழர்களை தொடர்ந்து நசுக்கினாலும் தமிழ்நாடு தனிநாடாக பிரியும் என்ற உண்மையை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். உணர வைப்போம்.

No comments:

Post a Comment