Saturday, September 26, 2020

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இந்தியாவில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் அடுத்த மாதம் (05.10.19) கொண்டாடப்படும்; என நினைக்கிறேன். ஆனால் எமது ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாட முடியும். மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து கடவுளுக்கும் மேலாக ஆசிரியர்களை மதிப்பதும் எம் தமிழ் இனம் மட்டுமே! பொதுவாக ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள் பாதுகாப்பும் கொடுப்பார்கள். தன் உயிர் போனாலும் பரவாயில்லை தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான் எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது. பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது ஓடி வந்து எம்மை மீட்ட காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா? பாடசாலையில் இருந்து அப்படியே இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின் சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில் ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய அந்த ஆசிரியர்களையும் மறக்க முடியுமா? தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா? (மீள் பதிவு)

No comments:

Post a Comment