Wednesday, September 30, 2020

ஹர்த்தால் சொல்லும் சேதி

•ஹர்த்தால் சொல்லும் சேதி தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதே! இராணுவ புலனாய்வாளர்கள் ஓடி ஓடி படம் எடுத்து மிரட்டுகிறார்கள் கடைகளை திறக்கும்படி வவுனியாவில் பொலிஸ் அச்சுறுத்துகிறது. மட்டக்களப்பில் சிங்கள பிக்கு “இது தமிழீழத்திற்கான அழுத்தம்” என்று அரசுக்கு கொம்பு சீவி விடுகிறார். கொரோனோவின் போது பல நாட்கள் ஊரடங்கு போட்டு கடைகளை பூட்டிய அரசு இப்போது தமிழ் மக்கள் ஒருநாள் கடைகளை பூட்டும்போது ஏன் அதை தடுக்கப் பார்க்கிறார்கள்? ஏனெனில் தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்ற செய்தி உலகிற்கு தெரியப்போகிறது என்ற அச்சமே காரணம். தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதே எதிரிக்கு இத்தனை அச்சத்தைக் கொடுக்கிறது என்றால் தமிழ் மக்கள் போராட தயாராகிவிட்டால்? வெற்றி நிச்சயம்.

1 comment:

  1. ஆம். தமிழ்மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பது எதிரிக்கு தெரிகிறது. ஆனால்.....

    ReplyDelete