Saturday, September 26, 2020

சிலரை அங்கீகரித்தார்கள்

சிலரை அங்கீகரித்தார்கள் சிலரை நிராகரித்தார்கள் சிலருக்கு எச்சரிக்கை வழங்கினார்கள் இதுவே தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு ஆனால் அனைத்தினதும் முக்கிய சாரம்சம் என்னவெனில் அனைவரும் இனி தமிழின நலனுக்காக ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதே. இதன்படி விக்கினேஸ்வரன் அவர்களும் டெனீஸ்வரன் அவர்களும் வழக்கை கைவிட்டு சமரமாகியுள்ளனர். அதுமட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் உள்வாங்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியையும் விக்கினேஸ்வரன் ராஜினாமா செய்துள்ளார். அனைவரையும் ஒன்றினைப்பதற்கான முயற்சியை யாழ் மருத்துவர்களும் பல்கலைக்கழக சமூகமும் முன்னெடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆரோக்கியமான நகர்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

No comments:

Post a Comment