Wednesday, January 11, 2017

•கசப்பான உண்மைகளையும் மக்களிடம் மறைக்காமல் கூறினால் மக்கள் மகத்தான வெற்றியை பெற்று தருவார்கள் - ஹோ சிமின்

.•கசப்பான உண்மைகளையும் மக்களிடம் மறைக்காமல் கூறினால் மக்கள் மகத்தான வெற்றியை பெற்று தருவார்கள் - ஹோ சிமின்
அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாம் வெற்றியின் ரகசியம் என்ன? என்று நிருபர்கள் கேட்டபோது வியட்நாம் தந்தை ஹோ சிமின் அவர்கள் கூறிய பதில் “ நான் மக்களுக்கு எதையும் மறைக்கவில்லை. கசப்பான உண்மைகளையும் மக்களிடம் கூறினேன். அவர்கள் வெற்றியை பெற்றுத் தந்தார்கள்”
ஆம். ஒரு நல்ல தலைவன் மக்களுக்கு எதையும் மறைக்கக்கூடாது. உண்மைகள் அவை கசப்பானவையாக இருந்தாலும் அதை ஒளிவு மறைவு இன்றி மக்களுக்கு கூறவேண்டும்.
சம்பந்தர் அய்யா கடந்த வருட இறுதிக்கள் தீர்வு என்றார். இப்போது இந்த வருட இறுதிக்குள் தீர்வு என்கிறார்.
கடந்த வருட இறுதிக்கள் ஏன் தீர்வு வரவில்லை என்பது பற்றியோ அல்லது இந்த வருட இறுதிக்குள் தீர்வு எப்படி வரும் என்பது பற்றியோ அவர் ஒருபோதும் மக்களுக்கு கூறவில்லை.
என்ன தீர்வு என்பது பற்றியோ அல்லது அந்த தீர்வை பெற என்ன முயற்சிகள் நடக்கின்றன என்பது பற்றியோ அறிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமை உண்டு.
ஆனால் அதை மக்களுக்கு தெரிவிக்க சம்பந்தர் அய்யா தவிhத்து வருகிறார். அல்லது மறுத்து வருகிறார்.
தீர்வு என்பது தன்னால் இலங்கை அரசிடமிருந்து பெறுவதாக சம்பந்தர் அய்யா நம்புகிறார் போல் உள்ளது.
அதனால்தான் தீர்வு என்பது தமிழ் மக்களால் போராடிப் பெற்றுக்கொள்வது என்பதை உணர அவர் மறுக்கிறார்.
உரிமை என்பது பிச்சை அல்ல, கெஞ்சிப் பெறுவதற்கு. அது போராடிப் பெறுவது. அதனால்தான் தமிழ் இனம் தொடர்ந்து பல காலமாக போராடி வருகிறது.
இந்த வருடம் தமிழ் மக்களுக்கு சம்பந்தர் அய்யா தந்த பலத்த ஏமாற்றத்தினூடேதான் பிறந்துள்ளது.
ஆனாலும் தமிழ் மக்கள் நம்பிக்கையினையோ அல்லது போராடும் உணர்வினையோ இழந்துவிடப் போவதில்லை.
ஏமாற்றும் சந்தர்ப்பவாத தலைமைகளை தூக்கியெறிந்துவிட்டு தமிழ் இனம் தொடர்ந்து போராடும். தனது உரிமைகளை பெறும்வரை அது உறுதியாக போராடும்.
தலைவர்கள் வருவார்கள். போவர்கள். ஆனால் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் இறுதி இலக்கை அடையும்வரை.

No comments:

Post a Comment