Sunday, January 22, 2017

•லண்டன் ஈஸட்;காம் நகரில் நடைபெற்ற பொங்கல் விழா!

•லண்டன் ஈஸட்;காம் நகரில் நடைபெற்ற பொங்கல் விழா!
இன்று மாலை 5 மணியளவில் ஈஸ்ட்காம் மெயின் வீதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
ஈஸ்ட்காம் மற்றும் வெஸ்ட்காம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இவ் விழா கவுன்சிலர் போல் சத்தியநேசன் தலைமையில் நடைபெற்றது.
ஈஸ்ட்காம் மெயின் வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழில் எழுதப்பட்ட “பொங்கல் வாழ்த்து” திரை உயரத்தில் கட்டப்பட்டிருந்தது.
அனைவருக்கும் பொங்கல் சுண்டல் மற்றும் பால்தேனீh வழங்கப்பட்டது. நாட்டிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
ஈஸ்ட்காம் நகர் தமிழ் வர்த்தகர்கள் ஆதரவுடன் தொடர்ச்சியாக இவ் பொங்கல் நிகழ்வை கவுன்சிலர் போல் சத்திய நேசன் நடத்தி வருகிறார்.
லண்டனில் பல தமிழ் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கும் தமிழருக்கும் முக்கியத்துவம் தரும் நிகழ்வுகளை பெற்று தருவதில் போல் சத்தியநேசன் முன்னிலை வகிக்கிறார்.
கவுன்சிலர் போல் சத்தியநேசன் மட்டுமன்றி இவ் நிகழ்வு நடைபெற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment