Tuesday, January 31, 2017

•ஒரு வழி அடைக்கப்பட்டால் ஒன்பது வழியை தமிழ் மக்கள் திறப்பார்கள்!

•ஒரு வழி அடைக்கப்பட்டால் ஒன்பது வழியை தமிழ் மக்கள் திறப்பார்கள்!
அமைதி வழியில் போராடிய மாணவனை அடித்தார்கள்.
உதவிக்கு ஓடி வந்த மீனவ மக்களை உதைத்தார்கள்.
பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை
“தோழர்” என்றும் அவர்களுடன் சேராதே என்றும் சொன்னார்கள்.
சிறுவனைக்கூட இரக்கமின்றி அடித்துவிட்டு
குடியரசு விழா கொண்டாட அழைக்கிறார்கள்.
தெரியாமத்தான் கேட்கிறேன்
குடியரசு என்றால் என்ன?
செய்தி-
•குடியரசு நாளை கறுப்பு நாளாக கொணடாட தமிழ் மக்கள் அழைப்பு.
•குப்பத்து மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி-26 துக்கதினம் கொண்டாட மக்கள் முடிவு
•ஜனவரி -26 செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக போராட அழைப்பு
ஆம். மெரினாவில் போராடியவர்களை பொலிஸ் அடித்து கலைத்தது. இப்போது போராட்டம் பல வழிகளில் பல இடங்களுக்கு பரவுகிறது.

No comments:

Post a Comment