Tuesday, January 31, 2017

•எதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு

•எதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு
பேசாமா தமிழ்நாட்டை தனியா பிரிச்சு விட்டுடுங்களேன்!
பிரதமரை விமர்சித்தவர்கள் “சமூகவிரோதிகள்” என்று பா.ஜ.க வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமைதி வழியில் போராடிய மாணவர்களை “பயங்கரவாதிகள்” என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரை மோடி முதல் அனைத்து பா.ஜ.க வினரும் அப்போது விமர்சித்திருந்தனர்.
ஆனால் அப்போது பிரதமர் மன்மோகன்சிங் இவர்களை சமூகவிரோதிகள் என்று கூறவில்லை.
ஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். யாரையும் யாரும் விமர்சிக்க முடியும். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
ஆனால் அன்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்தவர்கள் இன்று மோடியை விமர்சிப்பவர்களை பார்த்து சமூகவிரோதிகள் என்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்பட்ட கிட்லர் முசோலினி கூட தம்மை விமர்சிப்பவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதில்லை.
அதுமட்டுமல்ல டில்லியில் இருந்துகொண்டு 8 கோடி தமிழர்களையும் பொறுக்கி என்று சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமல்ல அவருக்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.
இப்பொது சமூகவிரோதிகள் என்பார்கள். அப்புறம் விமர்சிப்வர்களை பாகிஸ்தான் போகும்படி கூறுவார்கள்.
எதற்கு இந்த சிரமம். பேசாமல் தமிழ்நாட்டை தனியாக பிரித்து விடுங்களேன்!

No comments:

Post a Comment