Wednesday, January 11, 2017

•இந்த பொங்கலுக்காவது பேரறிவாளன் விடுதலையாவாரா?

•இந்த பொங்கலுக்காவது பேரறிவாளன் விடுதலையாவாரா?
•தமிழக அரசு எழுவர் விடுதலை செய்ய முன்வருமா?
ஒரு பொங்கல் திருநாளின் பொழுது தன் மகன் பேரறிவாளனுக்காக தந்தை குயில்தாசன் எழுதிய கவிதை,
அய்யா! என் மகனைக் கண்டீர்களா?
அம்மா! நீங்கள் கண்டீர்களா?
பத்தொன்பது வயது சிறுவன்
இருபது ஆண்டுகளாக காணவில்லை
தேடி தேடி சோர்ந்து போனேன்
முதுமையால் இயலவில்லை
நீங்கள் உதவி செய்வீரா?
அவன் பெயர் பேரறிவாளன்
மானுட இனத்தோரே
காலம் எம்மை தேய்ப்பதால்
கரைந்து வரும்
எம் உயிரைக் காப்பாற்ற
மீட்டுத்தர இறைஞ்சுகிறேன்
உதவி வேண்டும்!!
தந்தை குயில்தாசனுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலைக்கு அனைத்து தமிழரும் குரல் கொடுப்போம்.
எழுவர் விடுதலைக்கு ஜெயா அம்மையார் விரும்பியது உண்மை என்றால்
ஜெயா அம்மையாரின் பெயரால் இன்று ஆட்சி செய்பவர்கள்
ஏன் இன்னும் எழுவர் விடுதலைக்கு வழி செய்யவில்லை?
ஜெயா அம்மையாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாககூறி
எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வந்தால்
மோடி அரசு உட்பட யாருமே எதிர்ப்பு காட்டமாட்டார்களே!
ஏன் தமிழக அரசு இதில் அக்கறை காட்ட மறுக்கிறது?

No comments:

Post a Comment