Tuesday, January 31, 2017

•இந்த சிறுமிக்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?

•இந்த சிறுமிக்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?
இந்த சிறுமி துப்பாக்கி தூக்கியிருந்தால்,
அமெரிக்கா “குழந்தைப் போராளி” என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கும்
இந்தியா “ புலிப் பயங்கரவாதி” என்று தடை செய்திருக்கும்
இலங்கை “ பிரிவினைப் பயங்கரவாதி” என்று முத்திரை குத்தியிருக்கும்
ராணுவமோ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவுடன் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கும்
பாடப் புத்தகங்களை தூக்கிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டிய சிறுமி
7 வருடமாக தன் அப்பாவை தேடி போஸ்டர் பிடித்துக் கொண்டு நிக்குது
நல்லாட்சி அரசுக்கு இது எதுவும் கண்ணுக்கு தெரியுதில்லை.
நல்லாட்சி அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் சம்பந்தர் அய்யாவுக்கு இவற்றை பார்ப்பதற்கே பிடிக்குதில்லை.
இந்த குழந்தையின் தந்தையை இப்பொது காட்டாவிட்டாலும்
எப்போதுதான் காட்டுவீர்கள் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!
செய்தி- கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களில் பெண் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment