Tuesday, January 31, 2017

•ஒன்று திரள்வோம்! ஒருமித்து குரல் கொடுப்போம்!!

•ஒன்று திரள்வோம்!
ஒருமித்து குரல் கொடுப்போம்!!
ஒருபுறம் கொட்டும் மழைக் குளிர்
மறுபுறம் புலனாய்வு அதிகாரிகளின் மிரட்டல்
இவற்றுக்கிடையில் தம் உறவுகளைத் தேடி
உண்ணாவிரதம் இருக்கும் எமது உறவுகள்.
கடந்த ஏழு வருடமாக தேடி தேடி நொந்து விட்டார்கள்.
பார்க்காத தலைவர்கள் இல்லை
கெஞ்சாத அதிகாரிகள் இல்லை
கொடுக்காத மனுக்கள் இல்லை
இருந்தும் கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.
ஏற்கனவே நொந்து பாதி உயிரில்தான் வாழ்கிறார்கள்.
மீதி உயிரும் போகட்டும் என்று உட்கார்ந்து விட்டார்கள்
இப்போது கை கொடுக்கவில்லை என்றால்
இனி எப்பொதும் கை கொடுக்க முடியாது
ஒன்று திரள்வோம் எமது உறவுகளுக்காக
குரல் கொடுப்போம் அவர்களது நியாயமான கோரிக்கைக்;காக
தமிழகம் வழி காட்டடியிருக்கிறது
ஜல்லிக்கட்டு போராட்டம் உலக தமிழர்களை ஒன்றாக்pயுள்ளது
தொடர்ந்து பயணிப்போம் அதன் வழியில்
குறிப்பு – நல்லூர் வழிகாட்டுகிறது!
உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு ஆதரவாக
நாளைய தினம் நல்லூரில் தமிழ் மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

No comments:

Post a Comment