Wednesday, January 11, 2017

•சம்பந்தர் அய்யாவின் பல்டி !

•சம்பந்தர் அய்யாவின் பல்டி !
கடந்த வருடம் தீர்வு பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா தமிழ் மக்களிடம் வாக்குறுதியளித்திருந்தார்.
ஆனால் இப்போது “தான் தீர்வு வரும் என்று எதிர் பார்த்ததாகவும், தனது எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
வருடத்தின் இறுதிவரை சம்பந்தர் அய்யாவோ அல்லது சுமந்திரன் போன்றவர்களோ, யாருமே தாங்கள் தீர்வை எதிர்பார்ப்பதாக ஒருபோதும் கூறவில்லை
மாறாக “வருட இறுதிவரை பொறுமையாக இருங்கள். நிச்சயம் தீர்வு வரும்” என்றே கூறிவந்தார்கள்.
என்ன அடிப்படையில் தீர்வு வரும் என்று கூறியது பற்றியோ அல்லது தீர்வு என் வரவில்லை என்பது பற்றியோ இப்பவும் சம்பந்தர் அய்யா கூறவில்லை.
அடுத்து “இந்த வருடம் தீர்வு வரும்” என வழக்கம்போல் சம்பந்தர் அய்யா கூறுகிறார். இதுவும் வெறும் எதிர்பார்ப்புதானா என்பதை அவர் அடுத்த வருடம் கூறுவார்.
இப்படியே இவர் ஒவ்வொரு வருடமாக தனது பதவிக் காலம் முழுவதும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்.
இவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தரப் போவதில்லை. இந்த உண்மையை தமிழ் மக்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சம்பந்தர் அய்யா தனது பதவி நலன்களுக்காக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைப்பதை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிக்கப் போகிறோம்?
இதுவே தமிழ் மக்கள் முன் உள்ள விடை காணவேண்டிய முதன்மை வினாவாகும்!

No comments:

Post a Comment