Tuesday, January 31, 2017

•மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

•மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
தலைவரோ கட்டிங் அடித்து விட்டு குப்பறப் படுத்து கிடக்கிறார்.
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரத்ததை இன்று தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்களின் வாக்கு பெற்று பதவியை பெற்ற எந்தவொரு தலைவரும் அம் மக்களை சென்று சந்திக்கவில்லை.
8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்த எந்த எம்.பி யும் அவர்களை சென்று பார்வையிட விரும்பவில்லை.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் எம் தலைவர்களுக்கும்கூட வவுனியா சென்று இவர்களை சந்திக்க முயற்சி செய்யவில்லை.
மட்டக்கிளப்புக்கு சென்று பொங்கல் கொண்டாடிய சம்பந்தர் அய்யாவுக்கு இந்த மக்களை வந்து சந்திக்க விருப்பமில்லை.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. ஏன் இன்னும் இந்த காணாமல் போனவர்களின் பிரச்சனை தீர்க்கவில்லை என்று அரசைப் பார்த்து கேட்கவும் அவருக்கு விருப்பமில்லை.
வீதிகள் தோறும் காந்தி சிலைகளை நிறுவியே தீருவேன் என்று அடம் பிடிக்கும் இந்திய தூதரும் இந்த மக்களின் பிரச்சனை குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இந்திய தூதருடன் குவாட்டர் கட்டிங் அடித்துவிட்டு குப்பறப் படுத்து தூங்கும் சம்பந்தர் அய்யாவுக்கு எதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?
ரணிலுடன் சேர்ந்து சிங்க கொடியை பறக்க விடும் சம்பந்தர் அய்யாவுக்கு எதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் பதவி?
தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். தலைவரோ கட்டிங் அடித்து விட்டு குப்பறப் படுத்து கிடக்கிறார்.
பாவம் தமிழ் மக்கள்!

No comments:

Post a Comment