Sunday, January 22, 2017

•இத்தகைய ஒற்றுமைக் காட்சியை வேறு எந்த போராட்டக் களத்திலாவது கண்டதுண்டா?

•இத்தகைய ஒற்றுமைக் காட்சியை வேறு எந்த போராட்டக் களத்திலாவது கண்டதுண்டா?
சாதி, மதங்களை கடந்து ஒன்று திரளும் தமிழ் இனம்!
முதலில் சாதியை சொல்லி தடுக்கப் பார்த்தார்கள். 
ஆனால் அனைத்து சாதி மக்களும் ஒன்று திரண்டார்கள்.
பின்னர் மத வேறுபாட்டை தூண்டப் பார்த்தார்கள்.
ஆனால் மக்கள் அதற்கும் இடம் கொடுக்காமல் போராடுகிறார்கள்.
இஸ்லாமிய தமிழரும் போராட்டத்தில் ஒன்று கலப்பதை பொறுக்க முடியாத இந்து வெறியன் எச். ராஜா வேண்டுமென்றே வதந்தி பரப்பினான்.
ஆனால் தமிழ் மக்கள் அதற்கு இடங்கொடுக்கவில்லை.
போராட்டக் களத்தில் இஸ்லாமிய தமிழர் தொழுகை செய்வதற்கு இந்து தமிழர் இடம் அமைத்து கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல இந்து தமிழர் சூழ்ந்து நிற்க இ;ஸ்லாமிய தமிழர் தொழுகை செய்துள்ளனர்.
இத்தகைய ஒற்றுமை காட்சியை வேறு எந்த போராட்டக்களத்திலாவது கண்டதுண்டா?
இஸ்லாமிய தமிழ் பெண்கள் போராட்டத்தில் கலந்துள்ளனர்.
இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள் உணவு வழங்குகின்றனர்.
இஸ்லாமியர் தொழுகை செய்ய இந்துக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.
சாதி மத வேறுபாடுகளை கடந்து தமிழன என்ற உணர்வில் கலந்து கொள்ள வைத்துள்ளது இந்த போராட்டம்.
வாழ்க போராட்டம்!

No comments:

Post a Comment