Sunday, January 22, 2017

•போராட்டத்தின் ரகசியம் இதுதான்!

•போராட்டத்தின் ரகசியம் இதுதான்!
இப்போது அரசுக்கும் அதன் உளவுப் படைகளுக்கும் தோன்றியுள்ள மிகப் பெரிய கேள்வி இந்த போராட்டத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்பதே.
இந்தப் போராட்டத்தின் பின்னனியை ஆராய்வதற்காக எத்தனையோ முயற்சிகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த டீ கொடுத்தவரும் , கஞ்சி கொடுத்த தாயாரும் தான் காரணம் என்றால் அவர்கள் நம்பவா போகிறார்கள்.
அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை.
தினமும் டீ விற்றுப் பிழைப்பு நடத்துபவர் போராட்டம் நடக்கிறது என்று அறிந்தவுடன் ஓடிச் சென்று இலவசமாக டீ வழங்கினாரே. அந்த உணர்வுதான் போராட்டத்தின் வெற்றியின் ரகசியம்.
பொலிசாருக்கும் அஞ்சாமல் நள்ளிரவில் கஞ்சி காய்ச்சி எடுத்துச் சென்று கொடுத்தாரே அந்த வயதான தாய். அவருக்கு இருந்த அந்த உணர்வுதான் வெற்றியின் ரகசியம்.
எந்த கோடீஸ்வரர்களிடமும் பணம் வசூல் செய்யப்படவில்லை. எந்த வெளிநாட்டு என்.ஜி.ஓ வின் உதவியும் பின்னனியில் பெறப்படவில்லை
போராடுபவர்களும் சாதாரண மக்கள். போராட்டத்திற்கு உதவுபவர்களும் சாதாரண மக்கள். இதுதான் இந்த போராட்டத்தின் வெற்றி ரகசியமாகும்.

No comments:

Post a Comment