Sunday, January 22, 2017

•டில்லி அரசு மட்டுமல்ல தமிழக அரசும் தமிழக மக்களை அடக்க முனைகிறது!

•டில்லி அரசு மட்டுமல்ல தமிழக அரசும்
தமிழக மக்களை அடக்க முனைகிறது!
தெலுங்கு முதலமைச்சர் சந்திபாபு நாயுடு. அவரது சொநத ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு வழங்கியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தமிழக மக்களை அடக்கிறார்.
அலங்காநல்லூரில் பற்றிய தீ தமிழமெங்கும் படர்கிறது. தமிழக மக்கள் தடையை உடைத்து ஜல்லிக்கட்டை நடத்துகிறார்கள்.
வெறும் 13 இடங்களில் நடந்துவந்த ஜல்லிக்கட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் 30 இடங்களில் நடந்துள்ளது.
தடை போட்டார்கள்
தடையை மீறினால் கைது என்றார்கள்
அதனையும் மீறி திரண்ட மக்களுக்கு
மின்சாரத்தை நிறுத்தினார்கள்
உணவு கிடைப்பதை தடுத்தார்கள்
மருத்து வசதியைக்கூட இரக்கமின்றி தடுத்தார்கள்.
அத்தனைக்கும் அஞ்சாது மக்கள் இருக்கவே
தடியடி நடத்தினார்கள்
கைது பண்ணினார்கள்
இன்று தமிழகமெங்கும் தீ பரவிட்டது.
இது ஜல்லிக்கட்டிற்காக மூட்டிய தீதான்
ஆனால் இதுதான் இந்தியாவையே எரிக்கப் போகிறது.
இந்திழய அரசு தமிழர் உணர்வுடன் சீண்டிப் பார்க்கிறது.
அதன் விளைவை அது அனுபவிக்கப் போகிறது.

No comments:

Post a Comment