Tuesday, January 31, 2017

•தோழர் தமிழரசன் அன்று சொன்னதும் தமிழக மக்கள் இன்று உணர்ந்து கொண்டதும்!

•தோழர் தமிழரசன் அன்று சொன்னதும்
தமிழக மக்கள் இன்று உணர்ந்து கொண்டதும்!
தோழர் தமிழரசன் 33 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது உண்மைதான் என்பதை தமிழக மக்கள் இன்று தமது அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர்.
அகிம்சை வழியில் தீர்வு பெறமுடியாது. அகிம்சை போராட்டத்தை பொலிஸ் அடக்கிவிடும் என்று தோழர் தமிழரசன் அன்று சுட்டிக்காட்டியதை இன்று தமிழக மக்கள் தமது அனுபவத்தின் மூலம் கண்டு கொண்டனர்.
ஆயதப் போராட்டத்தின் மூலமே தீர்வு பெறமுடியும் என்பதை தோழர் தமிழரசன் அன்று கூறினார். அதை இன்று தமிழக மக்கள் தமது அனுபவத்தில் இருந்து புரிந்து கொண்டனர்.
தோர்தல் பாதை திருடர் பாதை என்றும் அதனை மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் தோழர் தமிழரசன் கூறினார். மக்களால் தேர்;ந்தெடுக்கப்பட்ட இத்தனை பிரதிநிதிகளும் இருந்தும் தீர்விற்காக மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
தமிழக மக்கள் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பொராட வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பினார். இன்று அது நடந்து வருவதை தமிழக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இந்திய அரசு ஒருபோதும் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்தாது. தமிழ்நாடு தனி நாடாக பிரிவதே தமிழக மக்களின் நலனுக்கு உகந்தது என்று தோழர் தமிழரசன் கூறினார்.
இன்றைய தமிழக மக்களின் போராட்டம் தமிழக மக்களுக்கு இந்திய அரசை இனங்காட்டியுள்ளது. தமிழ்நாடு தனிநாடாக மலர வேண்டும் என பலரும் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று அரசு வன்முறை மூலம் தமிழக மக்களை அடக்க முனைந்துள்ளது. இதுவரை அமைதி வழியில் போராடிய இளைஞர்கள் மீது வன்முறையை ஏவியுள்ளது.
இளைஞர்கள் இதற்கெல்லாம் பயந்துவிட மாட்டார்கள். ஒருபோதும் அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தோழர் தமிழரசன் காட்டிய வழியில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தகுந்த பதில் அளிப்பார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment