Sunday, January 22, 2017

•எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

•எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு!
மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்குமுகமாக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
மின்சாரத்தை நிறுத்தினால் போராடும் மக்கள் கலைந்து போய்விடுவார்கள் என்று நினைத்த முட்டாள் அரசு, இப்போது மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
மாணவர்கள் வகுப்பறையில் கற்றுக் கொள்ளாததை இனி போராட்டக் களத்தில் கற்றுக்கொள்ளப் போகிறார்கள்.
நூறு புத்தகங்களும் ஆயிரம் விரிவுரைகளும் கற்றுத் தராததை இந்த போராட்டக் களத்தில் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
போராட்டங்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை. களத்தில் பல பெறுமதி மிக்க அனுபவங்களை அவர்கள் பெறுவார்கள்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர் சங்கம் நாளை பந்த் அறிவித்துள்ளது. 50 லட்சம் கடைகள் மூடப்படும் என தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இதோ இந்த தாய் பனிக் குளிரிலும் எதற்காக கைக் குழந்தையுடன் போராடுகிறார்? இது மக்கள் போராட்டம் இன்றி வேறு என்ன ?
இப்பொது உங்கள் முன் உள்ள ஒரே ஒரு கேள்விதான் உள்ளது.
போராடும் மக்களுடன் கை கோர்க்கப் போகிறீர்களா?
அல்லது
வெளியில் நின்று காட்டிக் கொடுக்கப் போகிறீர்களா?

No comments:

Post a Comment