Sunday, January 22, 2017

•கிழக்கின் உதயமும் கிழக்கு மக்களின் எழுச்சியும்

•கிழக்கின் உதயமும்
கிழக்கு மக்களின் எழுச்சியும்
என்றும் தமிழர் மானம் காக்கும் மக்கள் அவர்கள்!
தமிழர்களின் எழுச்சியை அடக்க குள்ள நரி சம்பந்தர் பொங்கல் செய்தார்.
ஆனால் கிழக்கு மாகாண மக்களோ அதைப் புறக்கணித்துவிட்டு தமிழக உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக சொந்தங்கள் பட்டினி கிடந்து போராடுகின்றனர். அந்த நேசரத்தில் பொங்கல் விழா கொண்டாடுவது அழகல்ல என்பதை காட்டிவிட்டார்கள் அம் மக்கள்.
கிழக்கு மாகாண மக்கள் எப்போதும் உணர்வு மிக்கவர்கள். தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் அதிக உயிர்களை அர்ப்பணித்தவர்கள்.
எத்தனை அடக்குமுறை இருந்தாலும் தொடர்ந்தும் போராடுபவர்கள். போராட்டம் என்பது அந்த மக்களின் ரத்தத்தில் இரண்டற கலந்தது.
அவர்களிடம் சம்பந்தரின் குள்ள நரித்தனம் எடுபடாது என்பதைக் காட்டியுள்ளார்கள்.
கிழக்குமாகாண மக்களின் போராட்டம் தமிழர் மானம் காத்துள்ளது.
ஈழத் தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.

No comments:

Post a Comment