Tuesday, January 31, 2017

•முடிந்தா என்னை தாண்டி என் பிள்ளைகள் மேல் கை வையடா பார்ப்போம்!

•முடிந்தா என்னை தாண்டி என் பிள்ளைகள் மேல் கை வையடா பார்ப்போம்!
சென்னை மெரினா கடற்கரையில் பொலிசாருக்கு சவால் விட்ட வீரத் தாய்!
ஆதி. லாரன்ஸ் என்று பிரமுகர்களை விலைக்கு வாங்கிய பொலிசாரினால் இந்த தாயை வாங்க முடியவில்லை.
ஈழத்தில் என்ன நடந்ததோ அந்த அதிசயம் இப்போது தமிழகத்தில் நடக்குது.
களத்தில் அடிவாங்கும் மாணவன் என்ன சாதி என்று இந்த தாய் பார்க்கவில்லை
காயப்பட்டு ரத்தம் சிந்தும் மாணவன் எந்த மதம் என்று இந்த தாய் கேட்கவில்லை.
தான் பெத்த பிள்ளைக்கு ஒரு இன்னல் நடந்தால் பெத்த தாய் எப்படி பொங்கியெழுவாளோ
அப்படித்தான் இந்த வயதான தாயும் பொங்கி யெழுந்தாள்.
ஆம். இந்த தாய் போராடிய மாணவனை எல்லாம் தன் மகனாகவே கண்டாள். அதனால்தான் அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் வீறு கொண்டு எழுந்தாள்.
மக்கள் போராட துணிந்துவிட்டால் பீரங்கியையும் கல் கொண்டு நொருக்குவார்கள் என்று பிடல் காஸ்ரோ கூறினார்.
ஆம். இத்தனை பொலிஸ் முன்னால் துணிந்து உட்கார்ந்து இருக்கும் இந்த தாய்; உண்மையிலே அணுகுண்டை விட சக்தி மிக்கவள்.
இப்படியான மனிதர்களினால்தான் போராட்ட வரலாறுகள் உருவாக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment