Tuesday, January 31, 2017

•பலே பன்னீர்!

•பலே பன்னீர்!
இன்னும் நிறைய உங்ககிட்டேயிருந்து எதிர்பார்க்கிறோம்!
வாழ்நாள் பூராவும் “அம்மா” “சின்னம்மமா” என்று விழுந்து கும்பிட்டுக் கிடக்கும் உங்களுக்கு மாணவர்களின் எழுச்சியை புரிந்துகொள்வது கடினம்தான்.
அதனால்தான் மக்களை தாக்கிய பொலிசாருக்கு நிவாரணமும் தாக்கப்பட்ட மக்கள் மீது வழக்கும் போடுகிறீர்கள்.
உங்கள் பதவியை காப்பாற்றுவதற்காக, மோடி யை திருப்திபடுத்துவதற்காக அமைதி வழியில் போராடிய மாணவர்களை பின்லேடன் படம் பிடித்து போராடிய பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளீர்கள்.
கும்பிட கும்பிட அடிப்பவன் பயங்கரவாதியா? கும்பிட்டு கும்பிட்டு அடிவாங்குபவன் பயங்கரவாதியா?
பெண்களை அடிப்பவன் பயங்கரவாதியா? பெண்களை காப்பவன் பயங்கரவாதியா?
சொல்லுங்கள். உங்கள் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. அதற்குள் இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ தாராளமாக சொல்லுங்கள்.
டில்லியில் இருந்துகொண்டு எட்டுகோடி தமிரையும் “பொறுக்கி” என்று சுப்பிரமணியசுவாமி சொல்கிறான். அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்லை.
ஆனால் போராடிய மாணவர்களை பயங்கரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள். வெட்கமாய் இல்லை?
முடிந்தால் தாக்கிய பொலிசார்மீது வழக்கு பதிவு செய்யுங்கள். தாக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். கைது செய்யப்பட்டுள்ள 300 பேரையும் விடுதலை செய்யுங்கள்.
இல்லையேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் ஊரில் ஓய்வு எடுங்கள். ஆனால் மோடியை நம்பி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment