Sunday, January 22, 2017

•இத்தனை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது தமிழ் கலாச்சாரத்தை காக்கப் போகிறார்களாம்!

•இத்தனை காலமும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள்
இப்போது தமிழ் கலாச்சாரத்தை காக்கப் போகிறார்களாம்!
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற பொங்கப் போகிறார்களாம்.
கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றும் இவர்கள் எமக்கு கதை கூறுவார்கள்.
தமது பதவிக்காக தமிழ் இனத்தை விற்றவர்கள். 8 கோடி ரூபா சொகுசு வாகனத்திற்காக அரசிடம் மண்டியிட்டவர்கள். தமிழ் கலாச்சாரத்தை காக்கப் போகிறார்களாம். அதை எங்களை நம்பட்டாம்.
யாழ்ப்பாணத்தில் கல்லூரி வாசலில் கஞ்சா விற்கப்படுகிறது. நீலப் படங்கள் காட்டப்படும் தியேட்டர்கள் புதிது புதிதாக தோன்றுகின்றன. அது பற்றி எந்த அக்கறையும் கொள்ளாதவர்கள் தமிழர் கலாச்சாரம் காக்க மட்டக்கிளப்பில் பொங்க வருகிறார்களாம்.
சாராயம் விற்பனையில் யாழ் மாவட்டம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. போதாக் குறைக்கு கேரளாவில் இருந்து பொதி பொதியாக கஞ்சா வருகிறது. இவை பற்றி அக்கறை கொள்ளாதவர்கள் தமிழர் கலாச்சாரத்தில் அக்கறை கொள்கிறார்களாம்.
சிங்கள பொலிஸ் காவலில் சிங்கள அரசு கொடுத்த சொகுசு வாகனத்தில் தமிழர் கலாச்சாரம் காக்க வருகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
எழுக தமிழை குழப்ப வரும் குள்ள நரி சம்பந்தர் கும்பலுக்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்க கூடாது. இனியும் இவர்கள் ஏமாற்ற இடம் அளிக்க கூடாது.

No comments:

Post a Comment