Sunday, January 22, 2017

•தமிழக மக்களின் போராட்டமும் சம்பந்தர் அய்யாவின் பொங்கலும்

•தமிழக மக்களின் போராட்டமும்
சம்பந்தர் அய்யாவின் பொங்கலும்
கடந்த 4 நாட்களாக தமிழக மக்கள் போராடுகின்றனர். அவர்களுக்கு அதரவாக உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் குரல் கொடுக்கின்றனர்.
இந்திய தூதரின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லண்டன், அவுஸ்ரேலியா, அமெரிக்கா எல்லாம் கடும் குளிரிலும் ஈழத் தமிழர்கள் தமிழக மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கேரளா, பெங்களுர், டில்லி போன்ற பிற மாநிலத்தவர்கூட தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஈழத் தமிழருக்காக இதுவரை 16 தமிழக தமிழர் தீக்குளித்து இறந்துள்ளனர். தொப்புள்கொடி உறவுகள் என தொடர்ந்து எமக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இன்று அவர்கள் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பட்டினியுடன் போராடும்போது அவர்களுக்காக சம்பந்தர் அய்யா இதுவரை குரல் கொடுக்கவில்லை.
தமிழக தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் இந்திய தூதர் கோவிப்பார் என்று கருதினால் பேசாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் சம்பந்தர் அய்யா வேண்டுமென்றே மட்டக்கிளப்பில் பொங்கல் விழா கொண்டாடுகின்றார்.
தமிழ் மக்கள் நலனுக்காக பொங்கல் விழா கொண்டாடுவது என்றால் நிச்சயம் அவர் அதனை ஒத்திவைத்திருப்பார்.
ஆனால் அவர்தான் எழுக தமிழைக் குழப்புவதற்குத்தானே பொங்கல் விழா கொண்டாடுகிறார். எனவேதான் தமிழக மக்களைப் பற்றி அக்கறை இல்லாமல் கொண்டாடுகிறார்.
இத்தனை நாளும் ஈழத் தமிழரைக் கெடுத்தார். இப்போது தமிழக தமிழருக்கும் கெடுதல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இவருடைய குடும்பம் இந்தியாவில்தான் இருக்கிறது. அந்த நன்றிகூட இல்லாமல் தமிழக தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்.
இனி இவருடைய இந்திய முகவரியை தமிழக தமிழர்களுக்கு தெரியபடுத்துவோம். அவர்கள் இவருடைய துரோகத்திற்கு தகுந்த பரிசு வழங்குவார்கள்.

No comments:

Post a Comment