Sunday, January 22, 2017

வன்னி மாட்டுக்கு ஒரு கத்தை வைக்கோல் மட்டக்கிளப்பானுக்கு ஒரு பானைப் பொங்கல் பொங்க வருகிறார் சம்பந்தர் அய்யா பராக்! பராக்!

•வன்னி மாட்டுக்கு ஒரு கத்தை வைக்கோல்
மட்டக்கிளப்பானுக்கு ஒரு பானைப் பொங்கல்
பொங்க வருகிறார் சம்பந்தர் அய்யா பராக்! பராக்!
அன்றைய தமிழர் தலைவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் தன்னால் வன்னி மக்களை இலகுவாக ஏமாற்ற முடியும் என்பதை “ வன்னி மாட்டுக்கு ஒரு கத்தை வைக்கோல் கொடுத்தால் போதும் “ என்று நக்கலாக கூறியிருந்தார்.
இன்றைய தலைவரான சம்பந்தர் அய்யாவும் அNது போன்று மட்டக்கிளப்பு மக்களுக்கு பொங்கல் கொடுத்து ஏமாற்ற வருகிறார்.
இதுவரை எத்தனையோ பொங்கல் வந்தவிட்டது. எந்த பொங்கலுக்கும் வராத சம்பந்தர் அய்யா இந்த முறை மட்டும் எதற்காக வருகிறார்?
அதிகளவு விதவைகள் கிழக்கு மாகாணத்திலேயே இருக்கின்றனர். அவர்கள்மீது எந்த அக்கறையும் காட்டாத சம்பந்தர் அய்யா இந்தமுறை ஏன் பொங்கல் மீது அக்கறை காட்டுகிறார்?
கடன் சுமை தாங்க முடியாமல் மக்கள் தற்கொலை செய்கின்றனர். அது குறித்து எந்த அக்கறையும் காட்டாத சம்பந்தர் அய்யா இந்த முறை மட்டக்கிளப்பில் பொங்க வேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறார்?
•சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
•காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
•இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
•ராணுவம் வாபஸ் பெறப்படவில்லை. குறைக்கப்படவும் இல்லை
•திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படவில்லை
•புத்த சிலைகள் புதிதாக நிறுவப்படுகின்றன.
இவை எது குறித்தும் எந்தவித அக்கறையும் காட்டாத சம்பந்தர் அய்யா கும்பல் இந்த முறை மட்டக்கிளப்பில் பொங்கல் செய்ய அக்கறை காட்டுவது ஏன்?
எழுக தமிழ் நிகழ்வையும் தமிழ் மக்களின் எழுச்சியையும் குழப்புவதற்காகவே சம்பந்தர் அய்யா பொங்க வருகிறார்.
கடந்த வருடம் தீர்வு கிடைக்கும் என்றார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது.
இந்த வருடம் தீர்வு கிடைக்கும் என்றார். அவருக்கு சொகுசு பங்களா கிடைத்துள்ளது.
இனியும் சம்பந்தர் அய்யாவின் "சுத்துமாத்து"களை நம்பி ஏமாற மக்கள் தயாரில்லை.
பொங்க வரும் சம்பந்தர் அய்யாவுக்கு மட்டக்கிளப்பு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்

No comments:

Post a Comment