Sunday, January 22, 2017

•தோழர் தமிழரசன் உருவாக்கிய தீப்பொறி பெருங் காட்டு தீயாக மாறியுள்ளது.

•தோழர் தமிழரசன் உருவாக்கிய தீப்பொறி
பெருங் காட்டு தீயாக மாறியுள்ளது.
சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு விடுதலை என்னும் தீப் பொறியை தோழர் தமிழரசன் உருவாக்கினார்.
தமிழ்நாடு விடுதலைக்காக அவர் தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டி போராடினார். அவரை தமிழக உளவுப்படையினர் சதி செய்து கொன்றனர்.
தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் தமிழக விடுதலையை தடுத்துவிட்டதாக இந்திய அரசு நினைத்தது.
ஆனால் அதன் பின்னர் தோழர் லெனின் தமிழ்நாடு விடுதலைப் படையின் தளபதியாகி போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவ் வேளையில்தான் அவர் தமிழ்நாடு விடுதலைப்படையின் சின்னமாக காளையை அடக்கும் மனிதன் உருவத்தை தேர்ந்தெடுத்தார்.
தோழர் லெனின் மரணத்தை தொடர்ந்து பல புரட்சியாளர்கள் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
தோழர் தமிழரசன் வழி காட்டலில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்கள் திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், காhத்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை.
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட இந்த ஆறு தமிழ் இன உணர்வாளர்களும் சுமார் 3 வருடங்களாக மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இந்த உணர்வாளர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்து மட்டுமல்ல ஜாமீன் கூட மறுக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் இவர்கள் செய்த தவறுதான் என்ன? தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழகம் விடுதலை பெற வேண்டும் என்றார்கள்.
தமிழகம் விடுதலை பெறுவதுதான் ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்றார்கள். அதனால்தான் அவர்கள் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று இன்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இதையே 3 வருடத்திற்கு முன்னர் இந்த தோழர்கள் கூறினார்கள்.
தோழர்களை சிறையில் அடைத்தால் தமிழக விடுதலை உர்வை மழுங்கடித்தவிட முடியும் என தமிழக அரசும் அதன் காவல்துறையும் நினைத்தது.
ஆனால் அவர்கள் உணர்வு மங்கவில்லை. அவர்கள் சிறைக்குள்ளேயே கலகம் செய்கிறார்கள். தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
வெளியில் மக்களை தமிழரசன் பாதைக்கு மாற்றுகிறார்கள் என்று சிறையில் அடைத்தால் இவர்கள் சிறைக்குள்ளே கைதிகளை தமிழரசன் பாதைக்கு மாற்றுகின்றார்கள்.
இவர்களை என்னசெய்வது என்று தெரியாமல் தமிழக உளவுத்துறை கியூ பிராஞ் திகைத்துப் போய் நிற்கிறது.
ஆம். தோழர் தமிழரசன் உருவாக்கிய தீப் பொறி இன்று பெரும் காட்டு தீயாக பற்றிவிட்டது. இதை அணையாமல் தமிழ் தேச விடுதலையை வென்றெடுப்பது ஒவ்வொரு புரட்சியாளரினதும் கடமையாகும்.

No comments:

Post a Comment