Tuesday, January 31, 2017

•இரண்டு தமிழர்கள்

•இரண்டு தமிழர்கள்
ஒருவரால் தமிழ் இனம் பெருமை கொள்கிறது.
இன்னொருவரால் தமிழ் இனம் தலை குனிகிறது.
அமெரிக்காவில் புளொரிடா மகாணத்தில் மலைப்பாம்புகள் பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அவர்கள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தும் அவற்றை பிடிக்க முடியவில்லை.
இறுதியாக அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து மாசி சடையன் என்பவரையும் அவருக்கு துணையாக வடிவேல் கோபால் என்பவரையும் வரவழைத்தனர்.
அமெரிக்கா வந்த அந்த இரு தமிழர்களும் 8 நாட்களில் 13 மலைப் பாம்புகளை பிடித்து அசத்தியுள்னர். அதில் ஒரு பாம்பு மட்டும் 16 அடி நீளமுடையதாக இருந்துள்ளது.
இந்த தமிழர்களின் திறமையைப் பார்த்து அமெரிக்க மலைப்பாம்பு வல்லுனர்களே ஆச்சரியம் அடைந்துள்ளதாக மியாமி ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு தமிழர் மேகாலய கவர்னர் சன்முகநாதன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரமச்சாரி என்கிறார்கள்.
இவர் கவர்னர் மாளிகையை தன் காமக் கிளப்பாக மாற்றி கூத்தடித்துள்ளார். இதனால் 68 வயதான இவர் இந்தியாவின் 68 வது குடியரசு தினத்தில் பதவி விலக நேர்ந்துள்ளது.
மாசி சடையனால் தலை நிமிர்ந்த தமிழ் இனம் சண்முகநாதனால் தலை குனிகிறது!

No comments:

Post a Comment