Tuesday, January 31, 2017

•என்னதான் கத்தினாலும் கருணாவும் தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலைதான்!

•என்னதான் கத்தினாலும் கருணாவும்
தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலைதான்!
கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கறிவேப்பிலை போன்றே சில தமிழர்களை சிங்கள அரசு பயன்படுத்தி வருகிறது.
அதுபோன்றே மகிந்த ஆட்சி காலத்தில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்பட்ட கறிவேப்பிலையாக கருணாக இருக்கிறார்.
இதை சிறையில் அடைக்கப்பட்டவேளை கருணா உணர்ந்திருப்பார் என நினைத்தோம்.
ஆனால் அவர் இன்னும் உணரவில்லை என்பதையே அவரது அண்மைய பேச்சு காட்டுகின்றது.
நாட்டுக்கு விடுதலை வேண்டி தந்தவர் மகிந்த ராஜபக்ச அவரை மீண்டும் பதவியில் அமர்த்த தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என கருணா கேட்டுள்ளார்.
சிங்கள மக்களே மகிந்த ராஜபக்ச கும்பலை தூக்கியெறிந்து விட்டனர். அவர்கள் இழைத்த தவறுகளுக்காக கைது செயது சிறையில் தள்ள வேண்டும் என கோருகின்றனர்.
எனவே மகிந்த ராஜபக்ச இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. இதை உணர்ந்துகொள்ள முடியாத கருணா தமிழ் மக்கள் மகிந்தவை ஆதரிக்க முன்வரவேண்டும் என முட்டாள்தனமாக கேட்கின்றார்.
தனக்கு மதுவும் மாதுவும் தந்ததை நாட்டுக்கு விடுதலை பெற்று தந்ததாக கருணா நினைக்கிறார் போலும்.
ஆனால் செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்கு இது ஒன்றும் பாரதப் போரும் இல்லை. கருணா கர்ணனும் இல்லை.
கருணா சிங்கள அரசால் தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலையே!

No comments:

Post a Comment