Wednesday, January 11, 2017

•அமைச்சர் மனோ கணேசனுக்கு இருக்கும் உணர்வு கூட எமது தலைவர்கள் எவருக்கும் இல்லையே!

•அமைச்சர் மனோ கணேசனுக்கு இருக்கும் உணர்வு கூட
எமது தலைவர்கள் எவருக்கும் இல்லையே!
மனோ கணேசன் ஒரு அமைச்சர். அவர் அரசில் அங்கம் வகித்தாலும்கூட அரசுக்கு எதிராக தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
ஊடகவியலாளர் லசந்த வின் கொலைகாரர்கள் இன்னும் தண்டிக்கப்படாமைக்கு தான் வெட்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
மனோ கணேசனுக்கு இருக்கும் உணர்வுகூட எமது தமிழ் தலைவர்கள் யாருக்கும் இல்லையே.
ரவிராஜ் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படாமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் யாருமே இதுவரை வெட்கப்படவில்லை.
இன்றைய அரசை தாங்களே கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இன்றைய அரசு நல்லாட்சி அரசு என்று வேறு கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்த நல்லாட்சி அரசில் என் ரவிராஜ் கொலைக்கு நீதியை பெற முடியவில்லை?
இந்த நல்லாட்சி அரசில் பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கே நீதியைப் பெறமுடியாதவர்கள் முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு எப்படி நீதியைப் பெறப் போகிறார்கள்?
இவர்களுக்கு ரவிராஜ் கொலையில் நீதி பெற முடியாமைக்கும் வெட்கம் வரவில்லை.
முள்ளிவாயக்கால் கொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.
வெட்கம், மானம, சூடு, சொரணை எதுவுமே இவர்களுக்கு இல்லை.

No comments:

Post a Comment